சனி, 29 நவம்பர், 2008

மும்பை : முன்னிறுத்துவது என்ன!?

    திரு. ஹேமந்த் கர்கரே.. ஒரு காவலராகப் பணியில் அமர்ந்ததிலிருந்து, தன் நாட்டுக்காக அனைத்தையும் செய்யத் துணிந்த, பயமற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி.. இன்றைக்கு நாடு இழந்து நிற்கும் தேசியத் தீவிரவாத எதிர்ப்புப் படையின் ஒரு பிரிவின் தலைவர்..

 

இன்றைக்கு, மும்பையில் நுழைந்த தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பல அப்பாவி மக்களுடன், அவர்களை எதிர்த்து நின்ற கர்கரே போன்ற பல தீரர்களையும் இன்றைக்கு நம் தேசம், மனித சமுதாயம் இழந்து நிற்கிறது. திரு. கர்கரே போன்ற அஞ்சாநெஞ்சர்களுக்கு நம் அஞ்சலிகள்.

    வாழ்க்கை என்பதே பெரும் மாயம்தான். ஆனால், மனிதர் உயிரை மனிதர் பறிக்கும் வழக்கம் என்று ஒழியும்!? மும்பையில் நடப்பது புதிதான சம்பவம் அல்ல. சற்று புதிய வடிவில் நிகழ்த்தப்பட்ட சம்பவம். நம் நாடு தீவிரவாதத்திற்கு இரையாவது புதிதல்ல. நம் அரசியல்வாதிகள் தொலைக்காட்சியில் வீரமாய், அமைதியாய், உணர்ச்சிவசப்பட்டுப் பேட்டிகள் அளிப்பதும் புதிதல்ல.

ஒபாமா அழைத்தார். அவர் அழைத்தவுடன் தீவிரவாதம் நின்றுவிடப் போகிறதா என்ன!? தீவிரவாதம் என்பது ஒரு இன மக்கள், அல்லது ஒரு பகுதி மக்கள் ஒடுக்கப்படுகையில், அதிகாரப்பகிர்வு அவர்களுக்கு மறுக்கப் படுகையில் தோன்றுவது... அதை ஒபாமா அழைத்தவுடன் நிறுத்தி விட இயலுமா!?

தோழர் ரமேஷ் பாபு தொலைக்காட்சி ஒன்றில் குறிப்புக் களத்தினில் தெரிவித்தது போல, அரசியல்வவதிகளே, இது நீங்கள் தூங்கிச் செல்ல பாராளுமன்ற நேரமல்ல.. நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணம்... முன்னர் ஓரிடத்தில் குறித்தது போல, களங்கள் மாறலாம், மனங்கள் மாறுமா!?

  உடனடித் தீர்வு வேண்டுமெனில், இன்றைக்குப் பல உயிர்களை இழந்து மேலும் பல உயிர்கள் போகாது தடுத்தது போல, தீவிரவாதம் துளிர்க்கும் இடங்களை வேரறுப்பது ஒன்றே வழி.. ஆனால், நீண்டநாள் நோக்கில் பார்த்தோமெனில், என் செய்தால், தீவிரவாதம் குறையும்!? வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் தீவிரவாதம் தனைத் தடுக்க நெருக்குதல் ஒன்றே வழி.. ஆனால், உள்நாட்டினுள் மக்களின் மனங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதே தீவிரவாதத்தினை மட்டுப்படுத்த ஒரே வழி.

   மத ரீதியில், இன ரீதியில், மக்களை ஒன்றுபடுத்தி, அவர்கள் எப்படியெல்லாம் இப்பூவுலகில் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள், எவ்விதமான துயரங்களை அவர்கள் சந்திக்கவில்லை என எடுத்தியம்புதல் வேண்டும். முட்களை முட்களைக் கொண்டே களைய வேண்டும். மதத் தீவிரவாதத்தினை மதத்தினடிப்படையில் மக்களை ஒன்றுபடுத்தியே சரி செய்ய முடியும்.

  நிச்சயம், இவ்வழி பயன் கொடுக்க நாளாகும். ஆனால், அடுத்தத் தலைமுறையேனும் தீவிரவாதமற்ற உலகில் வாழ வேண்டுமெனில், பொறுமையாய், மிக மெல்ல மக்களின் மனதில் மகிழ்ச்சி எனும் விதையினைத் தூவ வேண்டும்.. எல்லா நாடுகளும் இதனைச் செய்ய முனைந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

ஆனால், அந்தோ... இலங்கையும், பாலஸ்தீனமும் மக்களின் உரிமைக்காகவல்லவோ போராட்டம் சந்தித்து வருகிறது...!? அங்கே மக்களனைவரும் சம உரிமையுடன் வாழ்வதனை மனித சமுதாயம் உறுதி செய்ய வேண்டும்.

மேலும் உலகில் சோமாலியா போன்ற நாடுகள் இருக்கும் வரை மக்களை சமாதானப் படுத்தும் விதம்தான் என்ன!?

ஏதேனும் வழியிருப்பின் சொல்லுங்களேன்....

 

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

kodoora mirugankal singam puli kooda than inathai thane azhippathilai 6 arivu padaitha manithan idhai sinthithal nandra ga irukkum

தாரணி பிரியா சொன்னது…

இப்போதைய தேவை நமது ஒற்றுமைதான். தீவிரவாதிகளுக்கு எதிராக நாம் ஒன்று பட வேண்டும். அறிக்கை போர் நடத்தும் அரசியல்வாதிகள் இதை யோசிப்பார்களா?

jas சொன்னது…

thamizh.... don't have words to express our grief.... the only thing we can do is to pray for the souls to rest in peace....we can salute and bow for the courage of the NSG people who had done an awesome job... they cared for other's lives without caring for theirs....May the God give their family members the courage to face the death of their dear ones....